• Call us on +61 414 933 577

Thirukkural

Thirukkural

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.

As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.


2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

தூய அறிவுடைய கடவுளின் நல்ல திருவடிகளைத் தொழாதவருக்கு, கற்ற கல்வியினால் உண்டாகும் பயன் யாது? ஒன்றும் இல்லை.

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?


3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர், எல்லா உலகங்களுக்கும் மேலானதாகிய முத்தி உலகில் எப்பொழுதும் வாழ்வார்.

They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.


4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.


5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.


6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.

Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.


7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.


8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்குப் பொருளும் இன்பமும் ஆகிய கடல்களைக் கடக்க இயலாது.

None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.


9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

எட்டுக் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், கேளாத செவி முதலியவை போலப் பயனற்றவையாகும்.

The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.


10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்; அடையாதவர், அதனைக் கடக்கமாட்டார்.

None can swim the great sea of births but those who are united to the feet of God.